16ஆயிரத்தை கடந்தது கொரோனா

ஈரோடு, ஏப். 13: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் 119பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று 117பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்து, மொத்த எண்ணிக்கை 16,049 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து 607பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை மாவட்டத்தில் 150பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories: