திருவண்ணாமலை, ஏப்.13: திருவண்ணாமலை நகராட்சியில், கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து கடந்த 20 நாட்களில் ₹3.85 லட்சம் அபராதம் வசூலிகப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனாலும், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றவில்லை. கடை வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முகக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர், நகரின் முக்கிய பகுதிகளில் முகாமிட்டு, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.