திருவண்ணாமலை, ஏப்.13: சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, வெம்பாக்கம் அடுத்த சுனைப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, மேளம் அடித்தும், கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியும் நூதன ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது: