உரிமையாளர்களுக்கு ஆலோசனை தீராத வயிற்று வலி விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கரூர், ஏப். 13: மாயனூர் அருகே விவசாயி தீராத வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்துள்ள சித்தலவாய் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (60). விவசாயி. இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலி நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்றும் பலனின்றி இருந்த அவர், மனமுடைந்து, கடந்த 9ம் தேதி சல்பாஸ் மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: