கரூர், ஏப். 13: கரூரில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல, கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது.