நெரூர் ஆற்றங்கரையோரம் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

கரூர், ஏப். 13: கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றங்கரையோரம் பயனற்ற நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை புதுப்பித்து இந்த பகுதிக்கு வரும் மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆலயத்தில் இருந்து காவிரி ஆறு செல்லும் வழியில் ஆற்றுப்பகுதிக்கும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டு சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது.

தற்போது, அதன் பயன்பாடு குறைந்த காரணத்தினால் யாரும் இதனை பயன்படுத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கும், ஆற்றுக்கும் வரும் அனைவரின் நலன் கருதி இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்ட நிலையில் இதன் நிலை மோசமாக உள்ளதால் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அனைவரின் நலன்கருதி, இதனை புதுப்பித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: