×

வியாபாரியை தாக்கி வழிப்பறி

புழல்: புழல் புத்தகரம் விஜயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன்(36). சோப்பு ஆயில் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு லட்சுமிபுரம், செங்குன்றம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மணிவண்ணனை வழி மடக்கி தகராறு செய்து கைகளால் தாக்கினர். பின்னர், அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.400, செல்போன் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து நேற்று புழல் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை