×

பூஜை போட்ட இடத்தில் சாலை அமைக்க கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

இளம்பிள்ளை, ஏப்.13: இளம்பிள்ளை அருகே பூமிபூஜை போட்ட இடத்தில் சாலை அமைக்கக்கோரி,  லாரியை சிறைபிடித்து  பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை பேரூராட்சி, புளியம்பட்டி 10வது வார்டு பூட்டுக்காரன் வீதியில், கடந்த மார்ச் 23ம் தேதி சங்ககிரி எம்எல்ஏ ராஜா தலைமையில் கான்கிரீட் சாலை அமைக்க  பூமி பூஜை போடப்பட்டது. தற்போது சாலை பணிகள் அருகில் உள்ள சாமுண்டி நகரில் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த பூட்டுக்காரன் வீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பூமி பூஜை போட்ட இடத்தில் சாலை பணி அமைக்கக்கோரி, நேற்று காலை லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் ஆகியோர், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தங்கள் பகுதிக்கு கான்கிரீட் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள், லாரியை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை