மயங்கி விழுந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஏப்.13: ஜார்க்கண்ட் மாநிலம் சுத்துரத்தா கிராமத்தை சேர்ந்தவர் நுன்னியன்சுரேன்(45), கூலி தொழிலாளி. இவர் உத்தனப்பள்ளி அருகே ஒபேபாளையம் கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, உத்தனப்பள்ளி இருளர் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி எஸ்.ஐ சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

Related Stories: