×

177 பேருக்கு கொரோனா

திருப்பூர்,ஏப்.12:திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள், அனைவரும் தற்போது திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 229 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,106பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 19,304பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ