×

போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் செல்ல நீண்ட நேரமானது. கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

உடுமலை, ஏப்.12:  உடுமலை காவல் நிலைய எஸ்.ஐ. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் நேற்று முன்தினம் பழனி சாலை, ஐஸ்வர்யா நகர், கொழுமம் சாலை, எஸ்.வி.புரம் உள்ளிட்ட இடங்களில் ரோந்து சென்றனர். அப்போது, முனீஸ்நகரில் தனியார் மருத்துவமனை பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை சோதனையிட்டனர். அவர்களிடம் 550 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர்கள் உடுமலை காந்திநகரை சேர்ந்த அருண்குமார் (25), கவுதம் (22) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா