×

கொரோனா பரவல் காரணமாக பஸ் பயணத்தை தவிர்த்த பொதுமக்கள்

திருப்பூர்,ஏப்.12:திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே பொதுமக்கள் அதிகமாக இரு சக்கர வாகனத்தில் வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் விளைவித்த கத்தரி, வெண்டை, பாகல், அவரை போன்ற காய்கறிகளை தினசரி காலை 4 மணி முதல் விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் பொதுமக்கள் பேருந்து பயணத்தை தவிர்த்து இரு சக்கரவாகனங்களில் உழவர் சந்தைக்கு வந்தனர். இதனால் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...