வரத்து அதிகரிப்பால் முருங்கை விலை வீழ்ச்சி

வெள்ளக்கோவில், ஏப்.12:  வெள்ளக்கோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் வெளிமாநிலத்துக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் 10 டன் விற்பனைக்கு வந்தது, கிலோ ரூ.15க்கு விற்பனை ஆனது. நேற்று 40 டன் விற்பனைக்கு வந்தது. மரமுருங்கை கிலோ ரூ.6க்கும், செடி முருங்கை கிலோ ரூ.8க்கும், கருப்பு முருங்கை ரூ.10க்கும் விற்பனையானது. முருங்கை சீசன் துவங்கி வரத்து அதிகரித்தால், நேற்று ஒரு கிலோவுக்கு ரூ.5 குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories: