வெவ்வேறு சம்பவத்தில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை

சூலூர், ஏப். 12 : சூலூரில் வெவ்வேறு இடத்தில் நடந்த சம்பவத்தில் 2பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.  சூலூர் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாஸ்(76). இவர் வயது முதிர்வின் காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மரியதாஸ் மகன் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரிக்கின்றனர். சூலூர் மேற்கு அரசூர்  பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி வனிதாமணி(30). இவர்களுக்கு 10 மற்றும் 6  வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.  வனிதாவிற்கும்  அவரது  கணவருக்குமிடையே கடந்த இரண்டு நாட்களாக குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நவநீதகிருஷ்ணன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: