பெண் தற்கொலை

ஈரோடு, ஏப்.12: ஈரோடு பெரியசேமூர் துரைசாமி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்த பாலு (42). பிரிண்டிங் பட்டறை உரிமையாளர். இவரது மனைவி சித்ரா தேவி (37). இவர்களுக்கு ஜிஜேந்திரன் என்ற மகன் உள்ளார். பாலுவுக்கும், சித்ராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  இதில், கடந்த சில நாட்களாக சித்ரா தேவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பாலு சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், சித்ரா தேவி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.  இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சித்ராதேவியை மீட்டு ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சித்ராதேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: