திருச்சி, ஏப். 12: திருச்சியில் தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ரவி தலைமை வகித்தார். பின்னர் அவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அளித்த பேட்டி: தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தில் சுங்கம் வசூலிக்கும் பணிகளில் 10 முதல் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களையும் பணி வரன்முறைப்படுத்தி பணி பாதுகாப்பும், ஊதிய நிர்ணயமும் செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் பலன்களும், பாதுகாப்பும், 480 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக தொடர் பணியில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.