ஒரே நாளில் 135 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஆத்தூர், ஏப்.12: ஆத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 135 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முகாமினை நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: