×

டாக்டர் வீட்டில் செல்போன் திருடியவர் கைது

ஆத்தூர், ஏப்.12: ஆத்தூர் உடையார்பாளையம் அய்யாவு தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது தனது செல்போனை டூவீலரில் வைத்து விட்டு, வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது. அந்த வழியாக சென்ற வாலிபர், வீடு புகுந்து திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும், அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். அதில், திருடிய நபரின் உருவம் பதிந்திருந்தது. அதனை வைத்து விசாரித்து டாக்டர் வீட்டில் செல்போன் திருடிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஹரிகரன்(22) என்பவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்