குளித்தலை அருகே இளம்பெண் மாயம்

குளித்தலை, ஏப்.12: குளித்தலை அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த நடுப்பட்டி கணேச புரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் சினேகா (20). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சினேகா வீட்டிலிருந்து கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர்கள் அக்கம் பக்கம் விசாரித்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தந்தை தர்மராஜ் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: