திருச்செங்கோடு அருகே தந்தை கண்டித்ததால் சிறுமி தற்கொலை

திருச்செங்கோடு, ஏப்.12: திருச்செங்கோடு அருகே குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (45).தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அவர் குமாரபாளையம் தனியார் நூல் மில்லில் மேலாளராக இருந்து வருகிறார். இவரது மகள் அமிர்தவர்ஷினி (16). குச்சிபாளையம் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். பள்ளிகள் திறக்காததால், ஆன்லைன் வகுப்பில் படிக்க தந்தை செல்போன் வாங்கி கொடுத்திருந்தார். ஆனால் அமிர்தவர்ஷினி செல்போனில் அதிக நேரம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனை தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அமிர்தவர்ஷினி, கடந்த 5ம் தேதி இரவு எலி மருந்தை சாப்பிட்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீண்ட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். ஆனால் பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார்.இது குறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: