×

ஆசிட் குடித்த மூதாட்டி பலி

ஆவடி, ஏப்.12: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மேனகா (60). இவர், தனது மகன் செல்வம் வீட்டில் வசித்து வந்தார். மேனகாவுக்கு கண்பார்வை குறைபாடு மற்றும் நீரழிவுநோய் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேனகா நீரழிவுநோய்க்கு மாத்திரை போட்டுவிட்டு தண்ணீர் என்று நினைத்து  அருகில் பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்துவிட்டார். இதனையடுத்து அவர் அலறி துடித்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மேனகா, நேற்று பரிதாபமாக இறந்தார்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...