×

குடிபோதை தகராறால் விபரீதம் கம்பெனி ஊழியர் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவானவர் கைது

புழல், ஏப். 12: புழல் அடுத்த லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (52). இவர் சென்னை கிண்டியில் உள்ள கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8ம் தேதி இவர் மாலை புழல் லட்சுமிபுரம்  பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றார். அப்போது அவருக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் இடையே, வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள். அன்பழகனை பின்தொடர்ந்து சென்று, சரமாரியாக அடித்து, உதைத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர்.

இது குறித்து, வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், விசாரணை மேற்கொண்டு, லட்சுமிபுரம் அசோகா தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், சென்னை கொளத்தூர் கிரிஜா நகரைச் சேர்ந்த ரத்தின கணேசன் (எ) அப்பு(39) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு கொளத்தூரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர், இரண்டு பேரையும் மாதவரம் நீதின்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...