×

கத்தி முனையில் டெலிவரி பாயிடம் வழிப்பறி: 2 பேர் கைது; கத்தி, 2 செல்போன் பறிமுதல்

புழல், ஏப். 12: சென்னை வியாசர்பாடி மேல பொன்னப்பன் முதலித் தெருவில் தனியார் உணவகம் உள்ளது. இங்கு சென்னை வில்லிவாக்கம் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜீவா(34) டெலிவரி பாயாக வேலை செய்கிறார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, வாடிக்கையாளர் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக, தனது  மோட்டார் சைக்கிளில் மூலக்கடை பகுதிக்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள்,  கத்தியை முனையில், ஜீவாவை மிரட்டி, அவரிடமிருந்து முன்னூறு ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ‘திருடன், திருடன்’ என சத்தம்போட்டு அலறினார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாதவரம் போலீசார், அந்த இரண்டு மர்ம ஆசாமிகளையும் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், வியாசர்பாடி மேல பொன்னப்பன் முதலித் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரதன்(26), என்ற மற்றும் வியாசர்பாடி பெரியார் நகர் உதயசூரியன் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ்(26) என்பதும்   தெரியவந்தது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து,  ₹300 மற்றும் ஒரு கத்தி, இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் வேறு எங்கும் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்
றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...