×

பள்ளிப்பட்டு அருகே கிடப்பில் போடப்பட்டசாலை பணி; கிராம மக்கள் கடும் அவதி

பள்ளிப்பட்டு,ஏப்.12: சரியாக போடாத தார் சாலையால்  கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் பாண்டரவேடு கிராமத்திலிருந்து குப்பமிட்ட கண்டிகை வழியாக ராமாநாயுடு கண்டிகைக்கு செல்லும் ஊராட்சி ஒன்றிய தார் சாலை சுமார் மூன்று கி.மீட்ட தூரம் வரை சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக தார் சாலை முழுவதும்  பொக்லைன் மூலம் பெய்ர்த்தெடுக்கப்பட்டது. பின்னர் சாலை அமைக்கப்பட்டது. சரியாக தார் போடாமல் ஜல்லிகற்கள் வெளியே ெதரிகிறது. இருப்பினும் அடுத்த கட்டமாக  சாலைப் பணிகள் தொடங்கப்படாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஜல்லி கற்களில் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் வந்து செல்ல கிராமமக்கள் அவதிப்படுகின்றது. தார் சாலைப் பணி தொடங்கி பாதியில் நிறுத்தியது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராமமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...