ஊட்டி,ஏப்.10: நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் என மொத்தம் 199 தொழிற்சாலைகள் மாவட்டம் முழுவதும் உள்ளன. இவற்றில் 23 ஆயிரத்து 483 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களுக்கே சென்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட துவங்கியது. அப்போது முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 96 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.