பஞ்சு மூட்டைகளுடன் லாரி தீ பிடித்து எரிந்தது

பொங்கலூர், ஏப். 10:   பல்லடம் அருகே ஆறாகுளத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நூற்பாலையில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கரடிவாவி நோக்கி நேற்று சென்றது. லாரியை கரடிவாவியை சேர்ந்த ஜெயராஜ்(50) ஓட்டினார். ஆறாக்குளம் கரடிவாவி சாலையில் சென்றபோது சாலையோரம் சென்ற மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதையறிந்த டிரைவர் ஜெயராஜ் லாரியை நிறுத்தி பஞ்சு மூட்டைகளை லாரியில் இருந்து அப்புறப்படுத்தினார். தொடர்ந்த அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி  தீயை அணைத்தனர். இவ்விபத்தில் சுமார் 60 ஆயிரம் மதிப்பிலான 31 பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: