சூலூர், ஏப்.10: சூலூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திமுகவினர் இலவசமாக முக கவசம் வழங்கினர்.
சூலூர் பகுதியில் கொரோனோவின் தாக்கம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இங்கு நாளொன்றுக்கு 100க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே திமுகவினர் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செல்லும் பயணிகளுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினர்.