திமுக சார்பில் முக கவசம் வழங்கல்

சூலூர், ஏப்.10: சூலூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திமுகவினர் இலவசமாக முக கவசம் வழங்கினர்.

சூலூர் பகுதியில் கொரோனோவின் தாக்கம் மாவட்டத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இங்கு நாளொன்றுக்கு 100க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சூலூர்  தெற்கு ஒன்றிய  திமுக சார்பில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே திமுகவினர் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செல்லும் பயணிகளுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினர்.

அதேபோல், அங்குள்ள வணிக நிறுவனங்களுக்கும் முக கவசத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம்  செய்தனர். இந்நிகழ்வில், சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன், பட்டணம் செல்வகுமார், சிபிசெந்தில், பத்மநாபன், சிடிசி செல்வம், கலங்கல் சிவக்குமார், மகளிரணியினர் உட்பட 50க்கும் மேற்பட்ட  கலந்து கொண்டனர்.

Related Stories: