சரக்கு ஆட்டோவில் 350 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; மூதாட்டி கைது

ேகாவை, ஏப். 10: கோவையில் 350 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

கோவை சுங்கம் பைபாஸ் ரோடு சிவராம் நகர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு ஆட்டோ ஒன்று வந்தது. அதனை ேபாலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

இந்த அரிசியை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முனியம்மாள் (70) என்பவர் கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. இது தொடர்பாக கோவை நகர உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியம்மாளை கைது செய்தனர். ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

முனியம்மாள் சில ஆண்டாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக தெரிகிறது. பொதுமக்களின் வீடுகளில் பயன்படுத்தாமல் இருக்கும் ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி அதை மூட்டை மூட்டையாக சேகரித்து பின்னர் வாடகை வாகனத்தில் பாலக்காட்டிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

Related Stories: