கலெக்டரிடம் முஸ்லிம் அமைப்பினர் மனு

கோவை, ஏப்.10: கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில்  தலைவர் முகமது அலி இம்தாதி, துணை செயலாளர் பைசல்  உள்ளிட்டோர் கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு  அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்  தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட  வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது.  இதன்படி வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட  வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி ஒரு மாதத்திற்கு  நோன்பு இருப்பது வழக்கம். அப்போது இரவு நேர தொழுகை உள்ளது.  எனவே தொழுகையை பள்ளி வாசலில் நடத்துவதற்கு இரவு 11 மணி  வரை அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: