கோவை, ஏப்.10: கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தலைவர் முகமது அலி இம்தாதி, துணை செயலாளர் பைசல் உள்ளிட்டோர் கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது. இதன்படி வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவித்து உள்ளது.