கோவை, ஏப்.10: கோவை போத்தனூர் அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (47). இவர் கடந்த 7ம் தேதி மாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் காளியம்மாள் கழுத்திலிருந்த 3.5 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வாசல்களில் இரவு 11 மணி வரை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்