கொரோனா விதிமுறை மீறிய ஓட்டலுக்கு சீல்

ஈரோடு, ஏப். 10:   ஈரோட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.     கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, ஈரோடு டீச்சர்ஸ் காலனி பஸ் ஸ்டாப்பில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாததையடுத்து கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர்.

Related Stories: