ஈரோடு, ஏப். 10: சத்தியமங்கலம் சதுமுகை, நடுப்பாளையம் குட்டை அருகில் மது விற்பனை நடப்பதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த சதுமுகையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பழனியம்மாள் (65), என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஏராளமான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.