சேலத்தில் 126 பேருக்கு கொரோனா

சேலம், ஏப்.10:நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று, இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கிறது. சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 76 பேரும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 27 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 18 பேரும், வெளி மாவட்டமாக கடலூரை சேர்ந்த ஒருவரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

Related Stories: