ஓட்டுக்கு பணம் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்

திருவள்ளூர், ஏப். 10: திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் ஒரத்தூர் ஜீவன் கலெக்டர் பொன்னையாவிடம்  கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதன் விவரம்: கடந்த 6 ம் தேதி நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு காவேரிராஜபுரம் கூட்டுறவு வங்கி செயலாளர் மேகநாதன் என்பவர் பணம் பட்டுவாடா செய்ததாக பறக்கும் படையினர்  பிடித்து கனகம்மாசத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். எனவே கூட்டுறவு வங்கி செயலாளராக அரசு பணியில் இருந்து கொண்டே  ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அவர் மீது தேர்தல் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: