திருவள்ளூர்: முகப்பேர், வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில்அனைவருக்கும் தடுப்பூசி என்ற தாரக மந்திரத்தை உறுதிமொழியாகக் கொண்டு செயல்பட்ட வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சென்னை கார்ப்பரேஷனுடன் இணைந்து கோவிட் 19 பரவுவதை அகற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த தடுப்பூசி முகாமை நடத்தியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 45 க்கு மேற்பட்ட வயதினருக்கான பிரத்யேக கோவிட் தடுப்பூசி சமூக இடைவெளியைப் பின்பற்றி தொடங்கியது.