திருவள்ளூர்: அரக்கோணம் அடுத்த சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுணன் (20). செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா ( 25). இரண்டுபேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு கௌதம நகர் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர்.இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி திருவள்ளூர் உழவர் சந்தை அருகே மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.சி.சத்தியமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் கீழானூர் பகுஜன் பிரேம், மத்திய மாவட்டத் தலைவர் திருநின்றவூர் இரா.