பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

அரூர், ஏப்.10: அரூர் கடைவீதியில் உள்ள ஸ்ரீவாணீஸ்வரி கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி நந்திக்கு சிலைக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வாணீஸ்வரர் வழிபாடு சங்க உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் நாகராஜ், ரகு, சதீஸ் ஆகியோர் செய்திருந்தனர். அதே போல், அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள வர்ணீஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ அருணேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் பெரியாம்பட்டி அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: