வேலூர், ஏப்.10:அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரக்கோணம் அடுத்த சோகனூரில் தேர்தல் முன்விரோதத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ₹50 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரியும் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.