குடியாத்தம் ஏப்.10: குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கண்ணாடி விரியன் பாம்பு மீட்டு காப்பு காட்டில் விடப்பட்டது.குடியாத்தம் அடுத்த செதுகரை நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வீட்டின் அருகே நேற்று காலை கண்ணாடி விரியன் பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.