மூதாட்டியிடம் 6 சவரன் பறிப்பு

ஆவடி, ஏப்.9: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கிஷோர் பாபு. இவரது மனைவி புவனேஸ்வரி (61). நேற்று காலை புவனேஸ்வரி வீட்டு முன்பு தெருவில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார். அப்போது, பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் புவனேஸ்வரியை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 6 சவரன் சங்கிலியை பறித்துள்ளனர். இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.  அதற்குள் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியுடன் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து புவனேஸ்வரி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா மூலமாக மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: