திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, ஏப். 9: திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 5ம் தேதி ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் ஆவணங்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது என்பவர் தங்கத்தை பேஸ்ட் போல் செய்து தனது உடலில் ஒட்டி மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள 357 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: