தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை, ஏப்.9: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள சடையம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் வெங்கடேசன்(26), கூலித் தொழிலாளி. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று குடும்ப பிரச்னை காரணமாக வீட்டின் அருகிலுள்ள மரத்தில் வெங்கடேசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: