திருவெறும்பூர், ஏப்.9: திருவெறும்பூர் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கியதோடு அவரது கைவிரலை கடித்து துண்டித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே கீழ மாங்காவனத்தை சேர்ந்தவர் சாங்கிலிமுத்து. இவரது மகன் திருநாவுக்கரசு(34), ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், பாரதி, முல்லைவேந்தன் ஆகிய 3 பேரும் குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து வந்துள்ளனர். இதனை திருநாவுக்கரசு தட்டிக்கேட்டுள்ளார்.