26 பேருக்கு கொரோனா

ஊட்டி,ஏப்.9: நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8,816 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,840 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 12 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,610 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 50 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 180 பேர் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: