மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் பலி

கோவை, ஏப்.9:  கோவை உலியம்பாளையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (63). ஏசி மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் காளப்பட்டி ரோடு நேரு நகர் பகுதியிலுள்ள அசோக் என்பவர் வீட்டில் புதிய ஏசியை பொருத்திக் கொண்டு இருந்தார். சுந்தர்ராஜன் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு ஏசி இணைப்பு தரும் பணியை மேற்கொண்டிருந்தார். ஆனால் மெயின் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஏசியை பொருத்தும் பணியில் இருந்த சுந்தரராஜன் திடீரென மின்சாரம் தாக்கியதால் இறந்து விட்டார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: