வால்பாறை, ஏப். 9: வால்பாறை டவுன் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று அதிகாலை மெயின்ரோட்டிற்கு வந்த சிறுத்தை, சாலையில் உலா வந்தது. இக்காட்சியை இளைஞர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இது குறித்து வனத்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நகரில் வலம் வரும் சிறுத்தையை பிடித்து அடர்வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்குடியிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.