மனைவி இறந்த துக்கத்திலும் ஜனநாயக கடமையாற்றிய முதியவர்

ஈரோடு, ஏப் 9:  ஈரோட்டில் மனைவியின் இறந்த துக்கத்திலும் ஜனநாயக கடமையாற்றிய முதியவரின் செயலை கண்டு மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். ஈரோடு  பெரியசேமூர் மல்லி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (65). கூலி தொழிலாளி. இவரது  மனைவி வெள்ளம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  வெள்ளம்மா கடந்த 2 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மனைவியின் ஈமச்சடங்கினை சடங்கினை தேர்தல் தினமான 6ம் தேதி  மதியம் நிறைவு செய்தார். பின்னர், ராமதாஸ் ஈரோடு சி.என்.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து அவரது  ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்தார். மனைவி இறந்த சோகத்திலும் வந்து  வாக்களித்தது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

Related Stories: