சித்தோடு அருகே சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு

ஈரோடு, ஏப். 9:  சித்தோடு அருகே சாலையோரம் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. சித்தோடு அடுத்துள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி அருகில் தனியார் எரிவாயு நிரப்பும் பங்க் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பங்க்கிற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட மரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி கடத்தியதாக கூறப்படுகின்றது. தகவல் அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்து மரம் வெட்டிய நபர்களை தட்டிக்கேட்டுள்ளனர். ஆனாலும் அக்கும்பல் அங்கிருந்த மரங்களை முழுமையாக வெட்டி கடத்தி உள்ளனர். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈரோடு தாசில்தார், கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: