காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை உறவினர்கள் மறியல் முயற்சியால் பரபரப்பு செய்யாறு அருகே

செய்யாறு, ஏப்.9: செய்யாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(30), இவர் சென்னை சாலவாக்கம் கந்தன்சாவடியில் உள்ள நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மரகதம். இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ(6) என்ற மகளும், சபரீஷ்(4) என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு ஆளான சீனிவாசன், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி தேர்தல் வாக்களிப்பதற்காக சொந்த ஊரான நெல்வாய் கிராமத்திற்கு சீனிவாசன் தனது மனைவியுடன் வந்துள்ளார். அங்கு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மரகதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக்கண்ட குழந்தைகள் அருகில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த தாத்தா ஆறுமுகம், பாட்டி ரங்கநாயகியிடம் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் ஓடிவந்து பார்த்தனர். தகவலறிந்த அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மரகதத்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து மரகதத்தின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் அவரை அடித்து துன்புறுத்தி கொன்றுவிட்டதாக புகார் தெரிவித்தனர். பின்னர் அன்றிரவு மருத்துவமனை எதிரில் ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு விரைந்து வந்த போலீஸ் எஸ்ஐ சதீஷ், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாவுக்கு காரணமானவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்ைக எடுப்பதாக தெரிவித்தார். இதனையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், தாய் தூக்கில் தொங்குவதை அறியாத மரகதத்தின் குழந்தைகள் தேவ மற்றும் சபரீஷ் தாயின் காலை வருடி பசிப்பதாக கூறி உணவு கேட்டுள்ளனர். அதற்கு எந்த ஒரு பதிலும் மரகதம் அளிக்காததால், வீட்டின் அருகே விவசாய நிலத்தில் இருந்த தாத்தா ஆறுமுகம் மற்றும் பாடியிடம் சென்று அம்மா வீட்டில் தொங்கி கொண்டிருப்பதாகவும், தங்களுக்கு பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டில் சென்று பார்த்தப்போது மரகதம் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தது அப்பகுதியினரிடையே பேரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: