ஆரணி, ஏப்.9: ஆரணி அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ்(38), நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் நேற்று முன்தினம் துந்தரீகம்பட்டு விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து சடலத்தை மீட்டனர். அதன்பிறகு நடத்திய விசாரணையில், 3 நாட்களுக்கு முன்பு மாயமான ராமதாஸ் என தெரியவந்தது.